Tuesday, April 5, 2011

உலகக்கோப்பை தோல்விக்கு பொறுப்பேற்று பதவி விலகிய இலங்கை கேப்டன் சங்கக்கார

ஒரு நாள் மற்றும் இருபது இருபது ஆட்டங்களுக்கான இலங்கை அணியின் அணித் தலைவர் பதவியில் இருந்து தான் விலகுவதாக குமார் சங்கக்கார அறிவித்துள்ளார்.


தனது முகாமையாளரின் ஊடாக அவர் இது குறித்து வழங்கிய தகவலில் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய அணிகளுடன் நடக்கவிருக்கும் டெஸ்ட் ஆட்டங்களை முன்னிட்டு இலங்கை கிரிக்கட்டின் டெஸ்ட் அணித் தலைவராக தான் தற்காலிகமாக தொடர்வதாகவும் அவர் கூறியுள்ளார்.

ஆஸ்திரேலியாவில் 2015 இல் நடக்கவிருக்கும் உலக கிண்ணப் போட்டியில் இலங்கை அணிக்கு ஒரு இளம் தலைவர் தேவை என்று தான் நம்புவதால், கடந்த உலக கிண்ணப் போட்டிக்கு முன்னதாகவே தான் இந்த முடிவை எடுத்திருந்ததாக 33 வயதான சங்கக்கார தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment