Friday, August 6, 2010

எளிமையான ருசியான பொரிவிளங்கா உருண்டை

   இந்த பொரிவிளங்கா உருண்டை மிக எளிதாக வீட்டில் உள்ள பொருட்களை கொண்டே செய்யக்கூடிய ருசியான இனிப்பு வகை. இதன் சிறப்பம்சம் தண்ணீர் படாமல் வைத்து இருந்தால் ஒரு மாதம் வரை நன்றாக இருக்கும்.



தேவையான பொருட்கள்:-
     புழுங்கல் அரிசி 1 கிலோ
     மண்ட வெல்லம் 1 கிலோ
     பொரிகடலை 200 கிராம்
     உப்பு 1/2 தேக்கரண்டி
     சுக்கு தேவையான அளவு

செய்முறை:-
     புழுங்கல் அரிசியை பொன்னிறமாக வறுத்து மாவாக அரைத்து கொள்ளவும். அந்த மாவில் சுத்தம் செய்த பொரிகடலை மற்றும் சுக்குப்பொடி சிறிதளவு சேர்த்து, அகலமான தட்டில் கொட்டவும். பிறகு மண்ட வெல்லத்தை தேவையான அளவு தண்ணீர் கலந்து வடிகட்டி 1 கம்பி பதம் வரும் வரை பாகு காய்ச்சவும்.

     பின், கொஞ்சம் கொஞ்சமாக மாவில் ஊற்றி இளஞ்சூட்டில் கொழுக்கட்டை போல் பிடித்து உருண்டையாக ஆற வைத்தால் ருசியான பொரிவிளங்கா உருண்டை ரெடி.

அனைவரையும் இந்த பதிவு சென்றடைய மறக்காமல் உங்கள் ஓட்டையும் பதிவு செய்யவும்.

1 comment:

  1. நெல்லை பக்கம் அரிசி சேர்க்காது பயித்தம் பருப்பு கடலை பருப்பு சேர்த்து செய்வார்கள்.

    ReplyDelete